Thursday, March 11, 2010


சிறகடிக்க


வழியில்லாமல்


சிறைபட்ட பறவையாய்


சிறைவைத்துக்கொள்ளடி (கொல்லடி)


உன் சின்ன இதயத்தில்....!

சந்தோசமடி.!

சந்தோசமடி,

இப்போதாவது

முகம் காட்ட சம்மதித்தாயே

என் கல்லறைக்குமுன்பாவது...!

நீ எனக்குமட்டுமே..!

எத்தனைமுறை

வேண்டுமானாலும்

உன் உதாசினங்களால்

என் உணர்வுகளை ரணமாக்கு,

என்னை தவிர

உன்னை மட்டுமல்ல

உன் நிழலையும் கூட

காதலிக்கும் உரிமை

எவனுக்குமில்லை.....!

என்னையேத்தருவேன்...........

கடனாய்

ஒருநாள் உன்னைக்கொடு !

வட்டியாக

என்னையும் சேர்த்துதருகிறேன்

உன்னிடமே ...............!

சாதகமாய்..........

தூரத்தில் நீ நின்று
வேறெங்கோ பார்த்தாலும்
உன் இதயத்தை தொலைத்துவிட்டு
என்னிடம்தான் தேடுகிறாயோவென்று
நினைத்துக்கொள்கிறேன் நான்
எனக்கு சாதகமாய்............

Wednesday, March 10, 2010

உனக்காக மட்டுமே.....

சில நேர
இடைவெளிகூட
பலமைல்தூர
தொலைவாய் தோன்றும்
உன் சின்ன இதயத்தில்
எனக்கொரு
சிறுபகுதி தருவாயோ...!

உன் கண்பார்வை
கடந்துசெல்ல
ஒரு கணநேரம் மட்டுமே ஆனாலும்
எங்கோ பறந்துபோகிறேன்
எனை அறியாமல் இறந்துபோகிறேன்!

முன்பெல்லாம் ,
சுவாசித்து உயிர்வாழ்ந்தேன்
இப்போதெல்லாம்,
உன்னுடன் வாழ்வதற்காக மட்டுமே
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்..........!