Wednesday, May 4, 2011

அன்பே.....!

எதையோ கேட்டு
அழுகின்ற குழந்தைபோல
உனைக் கேட்டு
அழுகின்றேன்.!

எப்போதும் கேட்கும்
பாடலாய்...
உனைப் பார்த்து
ரசிக்கேறேன்.!

எங்கோ ஒலிக்கும்
மணியோசை கேட்டு
தொழுகின்றவன் போல
எனக்கான
உன் குரல் கேட்க்க
ஒற்றையாய் தவமிருக்கிறேன்.!

மரம் இலை அசைவுகளாய்
என் நினைவுகள் அசையுதடி
உனக்கான பாடல் ஒன்று
எப்போதும்
உயிருக்குள் வந்து இசையுதடி.....!

No comments:

Post a Comment